
சம்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியராக நீண்டகாலம் சிறப்பாகச் சேவையாற்றி திருகோணமலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சம்பூரை பூர்வீகமாகக் கொண்ட வைத்திய கலாநிதி சதீஸ்குமார் அருமைநாதன், சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் சேவைநலன் பாராட்டு விழா (05) இடம்பெற்றது.
சம்பூர் வைத்தீஸ்வரர் ஆலய அறங்காவலர் சபையினராலும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களாலும் நடாத்தப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வைத்தியருக்கு நினைவுச் சின்னமும், வாழ்த்துப் பாவும் கையளிக்கப்பட்டிருந்தது.
