25 ஏக்கர் காப்புக் காடு எரிந்து நாசம்

கொழும்பு, பெப் 5: ஹட்டன் திம்புல பத்தனை பிரதேசத்தில் உள்ள டெவோன் எல்ல காப்புக்காட்டில் ஏற்பட்ட தீயினால், சுமார் 25 ஏக்கர் காடு எரிந்து நாசமானது.

இது தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் கூறுகையில் “கடந்த 4ஆம் திகதி இரவு 7 மணியளவில் டெவோன் எல்லக்கு மேற்கே திம்புல பதனவத்தை பகுதிக்கு அருகில் தீ ஏற்பட்டுள்ளது. இதனால், டெவோன் எல்ல காப்புக்காட்டில் சுமார் 25 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளது’ என்றார்.

டெவோன் எல்ல காப்புக்காடு பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பை அண்மையில் ஒரு குழுவினர் தீயிட்டு கொளுத்தியதால் சுற்றுச் சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மலைநாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக வேட்டையாடுவதற்கும் பொழுதுபோக்கிற்காகவும் காப்புக்காடுகளுக்கு சிலர் தீ வைப்பதாக அப்பிரதேச வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *