இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

கொழும்பு, பெப் 5: அனுமதியின்றி மின்சாரத்தை துண்டித்த விவகாரத்தில், இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

மின்சார சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் சட்டத்தின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு தடை விதிக்கப்படவில்லையென்றாலும், அதற்கு முன்னதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *