
திருகோணமலை – ஆதியம்மன் கேணி் முருகன் ஆலய கதவின் பூட்டு உடைத்து சேதப்படுத்தபட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது .
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிங்கபுரம் ஆதியம்மன் கேணி கிராமத்தில் இருந்து அருள்பாளித்து கொண்டிருக்கும் பாலமுருகன் ஆலயத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று சுவாமி இருக்கும் இடத்தை இனந்தெரியாத விஷமிகள் அசுத்தப்படுத்தியும் , சேதமாக்கியும் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர் .
இதனையடுத்து ஆலய நிருவாகத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு இன்று (05) காலை சென்று முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

