ஊழல் நிறைந்த சூழலில் படிப்பில் புகழ்பெற்றவர்களாலும் வேலை செய்ய முடியாது! சரத் பொன்சேகா

புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்தவர்கள் நாட்டில் இருந்தாலும் ஊழல் நிறைந்த சூழலில் அவர்களால் வேலை செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது.

பொருளாதார நிபுணர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதற்கு ஊழலற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தனது செயற்பாடுகளை தொடர முடியாது எனக் கூறியே பதவியை இராஜினாமா செய்தார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

மேலும் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்தவர்கள் நாட்டில் இருந்தாலும் ஊழல் நிறைந்த சூழலில் அவர்களால் வேலை செய்ய முடியாது என கூறினார்.

ஆகவே ஊழலற்ற நாட்டினை உருவாக்க, அனைத்து துறைகளிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

எனக்கு என்ன நடந்தாலும் சிரித்த முகத்துடன் கலப்படமற்ற வைத்தியராகவே இறப்பேன்! பிரியந்தினியின் முகநூல் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *