அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப கைதிகளை விடுவிக்க முடியாது: மகிந்த ராஜபக்ச

கொழும்பு, பெப் 5: அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு, கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பாக, சிங்கள நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் “அரசியல்வாதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அமைய கைதிகளை விடுதலை செய்வது சாத்தியமில்லை’ எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *