டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடந்த தேசிய மீனவர் மஹா சமேளனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம்

கொழும்பு, பெப் 5: தேசிய மீனவர் மஹா சமேளனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம், குறித்த சமேளனத்தின் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சனிக்கிழமை நடந்தது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சகத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலில், சம் மேளனத்தின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் விரிவுபடுத்துவது தொடர்பாகவும், கடற்றொழில் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

சம்மேளனத்தின் செயலாளர் நெல்சன் எதிரிசிங்கவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த, சம்மேளனத்தின் மாவட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *