
அம்பலாந்தோட்டையில் கடமையில் ஈடுட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டுள்ளார். அதேவேளை, தாக்கிய நபரும் சம்பவ இடத்தில் விஷம் அருந்தியுள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
அம்பலாந்தோட்டையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நிலையில் இன்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் விஷம் அருந்திய நிலையில், தாக்குதல் நடத்திய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தாக்குதல்தாரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சம்பவத்தின் போது மற்றொரு அதிகாரி சம்பவ இடத்தில் பணியில் இருந்தார்.
சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டம்; ஊடகவியலாளரின் மகளும் பங்கேற்பு