மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதமும்- வாகனமும் நேரடி மோதல்!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதமும், மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானகியுள்ளன.

வெலிகந்த மெனிக்தெனிய புகையிரத கடவையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

டிப்பர் சாரதி காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் டிப்பர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், புகையிரத இன்ஜினில் டிப்பர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்ஜினில் சிக்கிய டிப்பரை மீட்க பல மணி நேரம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது புகையிரத கடவை காவலாளி அங்கு இல்லை என்பதும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *