
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களையும் அவர்களது 6 விசைப்படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
கடந்த 26ஆம் திகதி ராமேஸ்வரம் மீனவர் 43 பேர் மற்றும் புதுகோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் மீனவர்கள் 12 போ் என மொத்தமாக 55 மீனவர்களின் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ஜெகதீபட்டிணம் மீனவர்கள் 55 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 46 மீனவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 46 மீனவர்களை சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யும்படி இலங்கையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் உறவினர்கள் இன்று ராமேஸ்வரம் வட்டாச்சியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்தாருப்பு போராட்டம் நடத்தினர்.
பின்னா் வட்டாச்சியார், ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாராகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ‘பேச்சுவார்த்தை நடத்த வரும் திங்கட்கிழமைக்குள் இலங்கையில் உள்ள மீனவர்கள் தாயகம் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தனர்.
இதனையடுத்து திங்கட்கிழமை மீனவர்கள் தாயகம் திரும்பி வராவிட்டால் திங்கள் முதல் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறி கலைந்து சென்றனர்.