கட்டுவன் மயிலிட்டி வீதி தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆராய்வு

அடாத்தாக அமைக்கப்படும் கட்டுவன் மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான பாதையில் 400 மீற்றர் பாதையை அபகரித்துள்ள படையினர், வீதியை விட மறுத்து தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் ஊடாக தற்போது பாதை அமைக்கும் விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்படி சுவீகரிக்காது நில உரிமையாளரின் சம்மதம் இன்றி அவர்களின் கிணறுகளை இடித்து அழித்து அதன் மேல் புதிய வீதிகளை அமைக்கின்றனர்.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் பார்வையிட்டதோடு, அடுத்த கட்டமாக இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரோடு, நில உரிமையாளர்கள், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தன், உறுப்பினர் ஹரிகரன் ஆகியோரும் வருகை தந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *