
நுவரெலியா – இராகலை – டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சடலத்தை இராகலை பொலிஸார் இன்று காலை மீட்டனர்.
இராகலை டெல்மார் மேல் பிரிவைச் சேர்ந்த 62 வயதான சுப்பிரமணியம் செல்வநாயகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் மகன் தந்தையை இரும்பு ஒன்றால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து, அதிக இரத்தப் போக்கு காரணமாக தந்தை வீட்டிலேயே உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.