காதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்!

ஒன்றிணைந்த துணை வைத்திய சேவை ஒன்றியம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னதாகவே அறிந்திருந்தும், அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இன்னும் எடுக்காதிருப்பதாக அந்த ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் நாளை மறுதினம் முற்பகல் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சுகாதார அதிகாரிகளின் செல்வாக்குக் காரணமாக, நிதியமைச்சர் மற்றும் அமைச்சரவை எடுத்த முடிவுகள் கூட செயற்படுத்தப்படவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளை எதிர்ப்பதாகவும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதிய உதவிக்கு அமைச்சர்கள் பச்சைக்கொடி: வாசு எதிர்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *