விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்! -மஹிந்தானந்த

கடந்த சில தினங்களில் சுமார் 5 மில்லியன் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை தொடர்ந்தும் கிலோவிற்கு 90 ரூபா என்ற ரீதியில் நெல்லை கொள்வனவு செய்யும்.

பெரும் போகத்தில் பயிர்களை இழந்த நெற் செய்கையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

கணக்கெடுப்புகளின்படி, பெரும் போகத்தில் சுமார் 30 சதவீதம் பயிர் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசு பல ஏமாற்று வேலைகளை செய்கிறது! கஜேந்திரன் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *