தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் சட்டம், சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறாது!

கொரோனாத் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் சட்டம், அரசமைப்பின் கீழ் இயங்கும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மற்றும்

அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரத்திற்கான உரிமையானது வரம்பற்ற அதிகாரம் அல்ல, அது மட்டுப்படுத்தப்பட்டதாகும். எனவே பொது சுகாதாரம் ஒரு வரம்பு.

இந்த வர்த்தமானி அறிவித்தல், அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை. பெரும்பான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு நல்ல நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *