கொழும்பு, பெப் 5: தேசிய மின் தேவை குறைவாக இருந்தால் சனிக்கிழமை மின்விநியோகம் தடையின்றி இருக்கும் என்று இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை மின்சார சபை மூத்த அதிகாரி கூறுகையில் “வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினம் என்பதால் தேசிய மின் தேவை குறைந்திருந்தது. தேசிய மின் தேவை வெள்ளிக்கிழமை 2,260 மெகாவாட் ஆகவே இருந்தது. இதனால் மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை.
வெள்ளிக்கிழமை மின் தேவையின், 75 சதவீதமானவை அனல் மின் நிலையங்களால் பூர்த்தி செய்யப்பட்டன. 23 சத வீதமானவை நீர் மின் நிலையங்களாலும், மீதமுள்ள 2 சதவீத மின் தேவை சூரிய சக்தி, பயோமாஸ் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.