கொழும்பு, பெப் 5: இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதர் நவோர் இட்சாக் கிலோன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து, இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.
இது தொடர்பாக வெளிவிவகாரத்துறை மூத்த அதிகாரி கூறுகையில்
‘இந்த சந்திப்பின்போது புதிதாக நியமிக்கப்பட்ட தூதருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், இஸ்ரேலுடனான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்பாக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளதும் பரஸ்பர நலனுக்காக வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இஸ்ரேல் தூதரிடம் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார்’ என்று அவர் தெரிவித்தார்.