கொழும்பு, பெப் 5: தெரணியகல ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் மூழ்கி, 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில் “தெரணியகல ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் வெள்ளிக்கிழமை காலை சிறுமியொருவர் மூழ்கியுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவர் மீட்கப்பட்டு, தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி தெரணியகல, அன்ஹெட்டிகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மக்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது அவதானமாக இருக்க வேண்டுமென பொலிஸார் கோரியுள்ளனர்.
நீரோட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வின்மை, கவனக்குறைவு காரணமாக நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.