
இலங்கையில் மீண்டும் ஒரு கொரோனாத் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி கொரோனா தொற்று அலை ஏற்படாது பாதுகாத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான ஆதாரம் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.