
யாழ். நல்லூர் பிரதேச செயலக கிராம சேவையாளர் பிரிவுகளிலில் உள்ள வறிய நிலை முதியோர் 25 பேருக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும், சர்வதேச தமிழ் வானொலி (பிரான்ஸ்) பணிப்பாளருமான சரவணையை சேர்ந்த விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானங்களைக் கொண்ட வறிய முதியோர் 25 பேருக்கு வாழ்வாதார நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான இணைப்பாளர் யோசேப், செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், தலைவர் நா.தனேந்திரன், உப செயலாளர் இ.சற்குருநாதன், ஆலோசகர் இ.மயில்வாகனம், சமூக சேவையாளர் சி.வசீகரன் போன்றோரால் பயனாளிகளுக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.


