மன்னாரில் 8 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

மன்னார், பெப் 6: கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்களை மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதன் பெறுமதி ரூ.8 மில்லியன் ஆகும்.

இது தொடர்பாக இலங்கை கடற்படை வட்டாரங்கள் கூறுகையில் “மன்னார், எருக்கலம்பிட்டி பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளோம்.

மன்னார் பொலிஸாரின் உதவியுடன் வடமத்திய கடற்படைப் பிரிவின் SLNS கஜபாகு கடற்படை வீரர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட 01 கிலோ 76 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் மீட்கப்பட்டது. அப்போது, கடத்தல்காரர்கள் வைத்திருந்த போதைப்பொருள், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின்பெறுமதி ரூ. 8 மில்லியன் ஆகும்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் பேசாலை பிரதேசங்களைச் சேர்ந்த 21, 39 வயதான இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *