கொரோனா பாதிப்பால் 28 பேர் உயிரிழப்பு

கொழும்பு, பெப். 6: நாட்டில் கொரோனா பாதிப்பால் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைச்சின் மூத்த அதிகாரி கூறியது: நாட்டில் கொரோனா பாதிப்பால் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 20 ஆண்கள், 8 பெண்கள் அடங்கும்.

பலியானவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவரும், 30-59 வயதுக்குட்பட்ட 5 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 21 பேரும் அடங்கும்.

இதன் மூலம், நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,572 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *