அரசுக்கு கூட்டுப்பொறுப்பு இல்லை! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

இந்த அரசாங்கத்திற்கு கூட்டுப்பொறுப்பு என்பது கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எரிசக்தி அமைச்சரினால் எரிபொருள் விநியோகம் செய்ய முடியவில்லை, அவர் மின்வலு அமைச்சரை குறை சொல்கின்றார்.

மின்வலு அமைச்சரினால் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியவில்லை, அவர் எரிசக்தி அமைச்சரை குற்றம் சுமத்துகின்றார்.

எனினும், இந்த இருவரினாலும் தங்களது பணிகளை சரியாக செய்து கொள்ள முடியவில்லை.

இது நாயின் வேலையை கழுதை செய்வதாகவும், கழுதையின் வேலையை நாய் செய்வதாகவும் கருத வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து நீதித்துறை சரியானதை செய்ய வேண்டும்! – சுமந்திரன் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *