நாடு முழுவதும் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானம் !

நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலாவது கூட்டம் எதிர்வரும் ( புதன்கிழமை ) பிற்பகல் 2.00 மணிக்கு அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மற்றும் பல ஆளுங்கட்சி அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

அரசாங்கத்தின் அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *