
வடக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் போராட்டங்களை நடத்திய குறிப்பிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தைக்கு செய்வதற்கு நான் தயாராகி அவர்களை அழைத்தபோது அவர்கள் வரவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு எவ்வாறு தீர்வினை வழங்குவது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் நீதி அமைச்சானது எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை மையமாகவைத்து எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.
வடக்கில் நீதிக்கான அணுகல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று அடுத்தகட்டமாக கிழக்கிலும் பின்னர் தெற்கிலும் மலையகத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அவை இந்த ஆண்டு முன்னெடுப்பதற்கு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.