வென்னப்புவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பரவில போலான பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெருக்கடிகளுக்கு தீர்வுகாண சர்வக்கட்சி மாநாட்டை நடத்தவும்! சு.க. கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *