
மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 நாட்களில் மாவட்டத்தில் 197 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று விடுத்துள்ள கொரோனா நிலைவர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் போது மேலும் புதிதாக 41 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 5 நாட்களில் 197 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 36 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.