
மைலிட்டி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த குறித்த நபர் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
துறைமுக பாதுகாப்பு அதிகாரி ஒருவரே குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.