வெள்ளவத்தை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட மாலைதீவு மாணவன்

கொழும்பு, பெப் 6: வெள்ளவத்தை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒன்று 24 வயதான மாலத்தீவு மாணவர் இஃப்ஹாம் நசீர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மலை தீவைச் சேர்ந்த இஃப்ஹாம் நசீர் என்ற இளைஞர் இலங்கையில் தங்கி இங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவர் காணாமல் போயுள்ளார். இவரைத் தேடும் பணிகளை பொலிஸார் முடுக்கியிருந்தனர். இந்நிலையில், வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒன்று காணாமல் போன மாலைதீவு மாணவர் இஃப்ஹாம் நசீருடையது என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

வெள்ளவத்தையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட மற்றைய சடலத்தை இதுவரை பொலிஸார் அடையாளம் காணவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *