அரசியல் தலையீட்டால் அபிவிருத்தியை முடக்காதே! – கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை – கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் பிரதேச சபைக்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை இடம் பெற்றது.

குறித்த சிறுவர் பூங்காவிற்குள் கடைத் தொகுதி அமைக்க வேண்டாம் சிறுவர் பூங்கா தேவை என நேற்று காலை ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றதனை தொடர்ந்து, இன்றைய தினம் உரிய பகுதியில் அபிவிருத்திக்காக கட்டடமும் தேவை, சிறுவர் பூங்காவும் தேவை எனக் கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

‘முடக்காதே முடக்காதே அபிவிருத்தியை முடக்காதே, அபிவிருத்தியில் அரசியல்வாதி தலையிடாதே, மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் கட்டடம், சிறுவர் பூங்கா தேவை, அபிவிருத்தியில் மண்ணை அள்ளிப் போடாதே’ போன்ற வசனங்களை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குளிக்கச் செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *