
கம்பஹா – அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா உக்கல்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி மற்றும் 42 வயதுடைய தந்தையே இவ்வாறு உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பௌசர் வாகன சாரதியின் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.