
கம்பஹா, பெப் 6: கம்பஹா அஸ்கிரி வல்பொல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பவுசர் ட்ரக் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 42 வயதுடைய ஒருவரும் அவரது 6 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் கம்பஹா உக்கல்பொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
டிரக் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.