
கணனியில் வேலை செய்தாலும் நாம் சாப்பிடுவதற்கு உணவு வேண்டும் அதற்கு, நாம் விவசாயம் செய்ய வேண்டும் என மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்று இடம்பெற்ற திண்ம கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் வாழ்வதற்கு உணவு வேண்டும். கணனியில் வேலை செய்தாலும், நாம் சாப்பிடுவது உணவு மட்டுமே. ஆகவே விவசாய என்ற துறையை நாம் மதிக்க வேண்டும். தற்போது உள்ள உர பிரச்சினையில் 50 கிலோ கிராம் உரம் 10 ஆயிரம் வரையில் விற்கப்படும் நிலை காணப்படுகிறது.
ஆகவே, நாம் சேதன பசளை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தெருவில் திண்ம கழிவுகள் வீசப்படுவதால் பல பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே அதனை முகாமை செய்ய வேண்டும். திண்ம கழிவு முகாமைத்துவம் சரியாக இருந்தால் அதனை நாம் சேதன பசளையாக மாற்ற முடியும்.
இவ்வாறு தயாரிக்கப்படும் பசளைகளுக்கு, பூவரசு உள்ளிட்ட இலைகளை பயன்டுத்தினால் அதன் தரம் அதிகரிக்கும். இவ்வாறு ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளும் இந்த செயற்பாட்டை மேற்கொண்டால் விவசாயம் செழிப்பாக இருக்கும்.
அதற்கு தேவையான தொழில் நுட்பம் சாய்ந்த உதவிகளை எமது விவசாய திணைக்களம் மேற்கொள்ளும். பகுதி நேரம் விவசாயம் செயப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். – என்றார்.