
வெற்றியோ, தோல்வியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனி தனித்தே தேர்தலில் போட்டியிடும் என அந்தக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதில்லை.
பங்காளிக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. பொதுஜன பெரமுன தன்னிச்சையான தீர்மானங்களைச் செயற்படுத்துகின்றது.
அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடையவில்லை. தற்போதைய நிலைமையில் எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் அரசாங்கம் நிச்சயம் படுதோல்வியடையும் என்பதாலேயே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.