
நிட்டம்புவை பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த திருடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான பெஜிரோ வண்டியை திருடிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவை நகரில் வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரது வாகனமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ள திருடன், சாவிகள் மாட்டி வைக்கும் இடத்தில் இருந்து வண்டி சாவியை எடுத்து, பெஜிரோவை கொள்ளையிட்டு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கியுள்ளனர். பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி சந்தேக நபர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஊடாக கொழும்பு திசை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னாசிய நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இலங்கை! – அபேசிங்க குற்றச்சாட்டு