
கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,595 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.