
கொழும்பு, பெப் 6: குடிநீர் கட்டணம் செலுத்த தவறிய முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்பட்டு அமைச்சரவையின் ஆலோசனைப்படி, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
குடிநீர் கட்டணம் செலுத்தத் தவறிய 45 பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில், சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு அமைச்சு சார்பாக உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த அமைச்சுக்கள் ஊடாக நீர் கட்டணங்களைக் கட்டுவதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவித்த பிற்கு, அமைச்சரவையின் பதிலின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரதெரிவித்தார்.