கச்சத்தீவிற்கு இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – மீனவர்கள் பிரச்சனையும் அங்கு பேசப்படும்!

<!–

கச்சத்தீவிற்கு இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – மீனவர்கள் பிரச்சனையும் அங்கு பேசப்படும்! – Athavan News

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருவிழாவில் கலந்து கொள்ளும் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் கலந்துரையாடலை நடத்தி இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களினதும் எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில்  இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி வழங்குவதில்லை என ஏற்பாடு குழு  தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *