இலங்கைத்திருநாட்டின் 74ஆவது சுதந்திரதினக்கொண்டாட்டமானது மட்டக்களப்புமாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜரப்பெரமுன கட்சியின் பிரதான காரியாலயத்திலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வானது ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் கௌரவ பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் தலைமையில் இலங்கையின் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தேசியக்கொடியேற்றலை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஆதரவாளர்களினால் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின் மட்டக்களப்புமாவட்ட பிரதான அமைப்பாளர் கௌரவ பரமசிவம் சந்திரகுமார் அவர்கள் உரையாற்றினார்.

அவருடைய உரையிலே ஸ்ரீலங்கா பொதுஜனப்பெரமுன கட்சியின் அமைக்கப்பட்ட அரசாங்கத்தினூடாக பாரிய அபிவிருத்திபணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதன்தொடர்ச்சியாகவே அதிமேதகு ஐனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய நிதியமைச்சர் கௌரவ பசில்ராஜபக்ஷ அவர்களினூடாக நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு ஆரம்பநிகழ்வும் நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு உலகெங்கும் பரவிய கொவிட் தொற்றுநோய் பரவலினை முடிந்தளவிற்கு காத்திரமான முறைமையிலே கையாண்டு கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். ஆகவே தொடர்ந்தும் எமது அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டங்களை முன்னெடுக்க நாட்டுமக்களாகிய உங்களது ஆதரவினை எதிர்பார்கிறோம்.

அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்களின் ஆளுங்கட்சிக்கான ஆதரவினை எதிர்பார்க்கிறோம் எனவும் மிகவும்காத்திரமான முறையிலே எடுத்துரைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *