எரிபொருள், நாளை வரையே போதுமானது என்கின்றது இலங்கை மின்சார சபை!

எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள், நாளை(திங்கட்கிழமை) வரையில் மாத்திரமே போதுமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக நாளை தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க, உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தின் அளவுக்கேற்ப பரிந்துரைகள் முன்வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்கமைய தரவுகள் சேகரிக்கப்பட்டு மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *