
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியில் வைத்து , இரண்டு வலன்புரிச் சங்குகளுடன் 43 வயதுடை சந்தேக நபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் – கட்டைபறிச்சான் இரானு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இரானுவ புலனாய்வாளர்கள் வலன்புரிச் சங்குகளுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
இவ் வலம்புரிச் சங்குகள் விற்பனை செய்யப்படுவதற்கு தயாரான சந்தர்ப்பத்தில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட இரண்டு வலம்புரிச் சங்குகளும் மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.