
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருணாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தொற்று உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனால், தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.