இந்திய படகுகளை ஏலத்தில் விடும் நடவடிக்கை! நாளை காரைநகரில் ஆரம்பம்

வடக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.

அந்த வகையில் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் இழுவை படகுகள் நாளை ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்காக கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழு யாழ்ப்பாணம் வந்துள்ளது.

இலங்கையின் 5 துறைமுகப் பகுதிகளான காங்கேசன்துறை, பருத்தித்துறை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான இழுவை விசைப் படகுகள் இன்று முதல் 11 ஆம் திகதிவரை ஏலத்தல் விற்பனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக அதிகமனோர் பார்வையிட்டுள்ளனர்.

இவ்வாறு பார்வையிட்ட படகுகளில் காரைநகரில் சுமார் 100 அடி நீள படகு ஒன்றே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த படகு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பிற்கு பயன்படுத்தக்கூடியது என கண்டுகொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அதிக கரிசணை காண்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *