
இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் மீனவர்கள் மீது இன்று பெற்றோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதன் போது, தம்மீது இரண்டு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் கடற்படையின் திட்டமிட்ட சதி எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மீனவர்களின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும், அமைச்சர் டக்ளஸின் வாக்குறுதியினால் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் இன்று பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.