
திருகோணமலை – குச்சவெளி – திரியாய் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம், குச்சவெளி பிரதேசத்தில் நேற்று (06) மாலை பொதுமக்களினால் இனங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குச்சவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுத்துறை உக்வத்தை விஜித மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சனத் எடுக்சூரிய (வயது 39) எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கொலையா அல்லது இயற்கை மரணமா என குச்சவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.