கொரோனா சிறப்பு ஏற்பாடுகளுடன் ஏ.எல். பரீட்சை ஆரம்பம்

கொழும்பு, பெப் 7: கொரோனா சிறப்பு ஏற்பாடுகளுடன், ஜி.சி.இ. உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் திங்கள்கிழமை தொடங்கியது.

2,438 நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த தேர்வில், 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, பரீட்சை நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரீட்சார்த்திகள் தமது அனுமதி அட்டைகள், செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *