
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த விசேட கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவினால் அண்மையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் அண்மைக்காலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.