
கொழும்பு, பெப்ரவரி: நாட்டில் தொடர்ச்சியாக எட்டாவது நாளாக திங்கள்கிழமையும் ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு சராசரியாக 800 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஜனவரி 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 1,056 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு வார காலமாக தினசரி ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை 1,331 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம், நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 618,520 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 21,720 ஆக உயர்ந்துள்ளது.