
கொழும்பு, பெப் 7: ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதுடன், கடந்த சில நாட்களாக தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர்கள் ஜயந்த சமரவீர, திலும் அமுனுகம பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந், நாலக பண்டார கோட்டேகொட, SJB பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.