கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி – டக்ளஸ்

கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறியளித்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்கின்றமை தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர் ஒருவருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கலந்துரையாடியதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனையின்படி தொலைபேசியூடாக இடம்பெற்றதாக கடற்றொழில் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சத்தீவு திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *